போபாலில் இருந்து தில்லி சென்ற வந்தே பாரத் ரயிலில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் இருந்து தில்லி சென்ற கொண்டிருந்த வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலின் ஒரு பெட்டி, குர்வாய் கெதோரா ரயில் நிலையம் அருகே திடீரென தீ பிடித்து எரிந்தது. இதை அடுத்து பயணிகள் ரயிலில் இருந்து வெளியேறினர். ரயில்வே அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு, தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் தீ அணைக்கப்பட்டது.
இது குறித்து ரயில்வே அதிகாரிகள் கூறுகையில், பேட்டரி பெட்டியில் தீ ஏற்பட்டதாகவும், உடனடியாக தீ அணைக்கப்பட்டதால் பயணிகளுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை எனவும் தகவல் தெரிவித்துள்ளனர்.